Login

Lost your password?
Don't have an account? Sign Up

வாருங்கள் மழையை நம்வீட்டுத் தேநீருக்கழைப்போம்! – கவிப்பேரரசு வைரமுத்து | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

இனிமேல் மழை பெய்தால்

நின்ற இடம் பெயராது
நில்லுங்கள்

நகரும் வாகனங்களுக்கு
நங்கூரம் பாய்ச்சுங்கள்

வீட்டுப் பறவைகளே
வெளியேறுங்கள்

கதவுகள் ஜன்னல்கள்
கண்கள் காதுகள்
திறந்து வையுங்கள்

மழை தேவதை
மண்ணுக்கும் விண்ணுக்கும்

சங்கீதம் பாடிக்கொண்டே
சதுராடுகிறாள்

எல்லோரும் ஒருமுறை
கைதட்டுங்கள்

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப் போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை?

வாருங்கள்

மழையை
நம்வீட்டுத்
தேநீருக்கழைப்போம்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

16 comments

  1. @sunderdevi6606

    ஓய்வு என்ற வார்த்தையை ஓரகட்டியவர் மாமனிதர் தமிழர் இனத்தின் 🙌🙌❤❤🙏🙋‍♀ பாதுகாவலன் எங்கள். அண்ணன் சீமான்

  2. @anoopprabhakar2007

    அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் ,அதிசயம் அற்புதம் என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம். எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர்அணுவும் அசையாது உண்மை சத்தியம்.

    எனில் நடப்பவை காண்பவைகேட்டவை நிகழ்பவை எல்லாம் அவன் செயல் அல்லவா எது எப்பொழுது எந்த நேரத்தில் எப்பொழுது யாருக்கு எது கிடைக்க வேண்டுமோ அது சரியாக நாம் பிறக்கும் பொழுது எழுதி வைத்தது நமக்கு தெரியாதுஅந்த நிகழ்வு தான் நடக்கிறது .ஆனால் நினைப்பவை எல்லாம் நடப்பதே இல்லைஅந்த நிகழ்வு தான் நடக்கிறது அதுதான் உண்மை. எது நடக்கணுமோ அவன் செயல் எப்பொழுது எது நடக்கணுமோ அந்த நிகழ்வு தான் நடக்கிறது அதுதான் உண்மை ஏன்னா நினைப்பவை எல்லாம் நடப்பதே இல்லை எது நடக்கணுமோ அவன் செயல் எப்பொழுது எது நடக்கணுமோ ,கண்கொள்ளா காட்சிகள்காண்பவை, எல்லாம் நமக்கு அவன் கொடுத்த வரம் அது சரியாக இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி.

    ஏன் நான் நேற்று இரண்டே கால் மணி விழிப்பு வந்தது பதிவு எடுத்துவிட்டு திரும்ப நான் திரும்ப ஒரு மணி நேரம் தூங்கி இருக்கிறேன் நேற்றுஆனால் அதே டைம்இன்று முழிப்பு வந்ததுஎழுந்து என் கடமை ரொம்ப கடமை எல்லாம் இல்லை.

    ஒரு சின்ன கடமை அதை செய்துவிட கரண்ட்மின்சாரம் போய்விட்டது புயல் காற்று வீசியது பார்த்து ரசித்தேன்உண்மை சத்தியம் அப்படி ஒரு காற்று இரவு முழுவதும்அதனால் அதிலிருந்து தூக்கம் கலைந்தது அதற்கு அப்புறம் நான் சும்மா என்னுடைய எனக்கு என்ன பிடிக்குமோ அதை கேட்டுக் கொண்டே இருந்தேன்

    அப்புறம் மருமகள் எழுந்து சமையல் பண்ண ஆரம்பித்து அவள் இன்று வேலைக்கு சென்று விட்டால் இன்று லீவு கிடையாது கண்டிப்பாக வந்தே ஆகணும் என்று.

    அழகான தலைப்பு மழைநீர் அந்தஅனுபவம், புயல் காற்றோடு மழை நீர் அது நம் இயற்கையோடுகண்டு களிக்கும் பொழுது அழகாக இருக்கிறது ரசிக்கும் பொழுது எல்லாம் நமக்கும் அதற்கும் தொடர்பு அதிகம் இருக்கிறது.அளவுக்கு மீறி மனிதனின் செயல் அளவுக்கு மீறி இயற்கையோடு அவன் எப்படி நடந்து கொள்கிறானோ அது மாதிரி தான் அந்த இயற்கையும் நமக்கு பதில் கொடுக்கிறது .கணவன் மனைவி எப்படி அந்த உறவு இருக்கும் அதே மாதிரி அந்த இயற்கையும்நம்மளோட ஒரு உறவு வைத்து இருக்கிறது அந்த உறவை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று அந்த இறைவன் நமக்கு அளிக்கின்ற வரப்பிரசாதம் தான் அதுஉண்மையில் மழைநீர் புயல் காற்று எல்லா தெருகளிலும் எல்லாவாசல் வீடு வரைஒரு மனிதனின் முக்கால் அளவு இடுப்பளவுக்குமழைநீர் வந்துவிட்டது.மகிழ்ச்சி மகிழ்ச்சி.எந்த ஒரு வண்டியும் செல்ல முடியாத அளவுக்கு அவரவர்கள் வீட்டு வரவர வரவேற்பு அறைக்கு வந்துவிட்டது.இந்த வீடு நாலு சுவர் மண் செங்கல்,இரும்பு கம்பி சிமெண்ட் இந்த வீடு பாதுகாப்பு சுவர் இல்லை என்றால் ஒவ்வொருஉடல் அந்த நிலைதான் மனிதனின் நிலைமையும் நினைத்துப் பார்க்க வேண்டும் இயற்கையோடு நாம் வாழ்வது மிகக் கடினம்இயற்கையை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதற்குத் தகுந்த பதில் நமக்கு கொடுக்கிறது நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் நமக்கு அது பாதுகாப்பாக இருக்கும் .
    இதுதான் உண்மை சத்தியம் .எதை நீங்கள் தலைப்பா கொடுத்தீர்களா அது நாம் அழைக்காமல் நம் வீட்டிற்கு வந்து விட்டது ,இதுதான் இயற்கை அன்னை நமக்கு கொடுத்த வர பிரசாதம்உண்மை சத்தியம். இனிமேல் தான் ஆடியோ கேட்கப் போகிறேன்.

  3. @fluffycandyfloss5045

    அழகான பதிவு இயற்க்கையை பேரன்பு கொண்டு நேசிக்க வேண்டும் 🐦🐦🐦 இயற்க்கை உயிரினங்களும் மரங்களும் செடி கொடிகளும் உய்வு பெறவேண்டும்
    இயற்கை தரும் நீரை சேமித்து பயனாற்ர வேண்டும்
    ்அண்ணன் சொல்லும் வேத மந்திரங்கள் அவை
    அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👌

  4. @anoopprabhakar2007

    அன்புள்ள ,சீமான் அண்ணா வணக்கம் . இயற்கை வளம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை எத்தனை கோடி கொடுத்தாலும் அதை வர்ணிப்பதற்கு அத்தனை வார்த்தைகள் அந்த இயற்கை அன்னை நமக்கு கொடுத்திருக்கிறார்.
    உண்மையில் அதை உணர்ந்தோம் என்றால் நம் காது கண் மூக்கு வாய் எல்லாம் நாம் முதலில் இருந்த மனிதனுக்கும் திரும்ப நாம் இந்நிலை வந்த பிறகு அதன் வேறுபாடு நம் உடலில் ஏற்படுகின்றது அல்லவா 5 பஞ்சபூதங்களும் இயற்கை அன்னையோடு நம் உடலிலும் ஏற்படும் அந்த வித்தியாசம் அதை உணர்ந்தேன். நம் காது கண், மூக்கு ,சுவாசம், எல்லாம் வந்து என்ன ஒரு நிகழ்வு வேறொரு நிகழ்வு ஏற்படுகிறது அதுதான் உண்மை அதை சொல்ல முடியாது அப்படி ஒரு நிகழ்வுதான் அது உண்மையான உணர்வுள்ளள உணர்வுஇறைவன் கொடுத்த வரம் காது எதைக் கேட்கணுமோ அதை எதை கேட்க வேண்டுமானால் அதற்கு முன்னாடி உள்ளது வேற இப்பொழுது உள்ளது வேற வேறஅதை மட்டும் தான் என் செவிக்கு சிறப்பான வையாகக் கொண்டு வந்து கொடுக்கிறது இறைவன் படைப்புஅதை மட்டும் தான் என் செவிக்கு சிறப்பான வையாகக் கொண்டு வந்து கொடுக்கிறது இறைவன் படைப்புஅதை மட்டும் தான் என் செவிக்கு சிறப்பான வையாகக் கொண்டு வந்து கொடுக்கிறது இறைவன் படைப்பு. அதே மாதிரிசுவாசம் சாப்பிடுவது சுவை,காட்சிகள் கண் கொள்ளா காட்சிகள் எல்லாமேஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை அதுதான் உண்மை பாதி ஆடியோ கேட்டேன். இயற்கை அன்னை உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இறைவன் கொடுத்த வரம் அது எனக்கே தெரியாது அது வருவதற்கும் ஒவ்வொன்றாக நிகழ்வதற்கும் நம் தொண்டை குரல் வளம் அது நிகழ்வதற்கும் நமக்கு ஒவ்வொரு துன்பம் கிடைத்தது அந்த துன்பத்தை எல்லாம் தாண்டி தான் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை வந்து கொண்டே இருக்கிறேன் இதுதான் உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அற்புதம் இதுதான் ஒரு அதிசயம் அற்புதம் எண்ணங்களாலே சிந்தனை தெளிவு வார்த்தை எண்ணங்கள் அலைவரிசை உடல் எல்லாம்் பஞ்சபூதங்கள் இயற்கைஒன்றுடன் ஒன்று தொடர்புஒன்றுடன் வந்த தொடர்பு அந்த சூரியன் அந்த நிலவு அந்த நட்சத்திரம்் அதுகருமேகம் வெண்மை நீல நிறம் வானவில் சூழ்ந்த வானம் மேகம்அந்தக் கோள்கள் அனைத்தும் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு நொடியும் அது நமக்குள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்கிறேன் இதுதான் இறைவன் கொடுத்த அருள்ஆசி உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கும் நான் சாட்சி இது நூற்றுக்கு நூறு உண்மை.இதை நிரூபிக்கிறதுக்கு அந்த இறைவன் மட்டும்தான் எனக்கு சாட்சி வேற யாரும் இதை சொன்னால் அவர்களுக்கு தெரியாது.என் உடல் உயிர் சாய் அவர் என்றே நான் இல்லை என் உடல் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாப் புகழும் இறைவனுக்கேஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.காட் பிளஸ் யூ அண்ணா திரும்ப இன்னும் பாதி கேட்க வேண்டியது இருக்கிறது.எது எது நமக்குஎது எது நமக்கு தேவை எது எது தேவை இல்லை என்பதை இறைவனை அதை சரிப்படுத்திஎது எது நமக்கு தேவை எது எது தேவை இல்லை என்பதை இறைவனை அதை சரிப்படுத்தி விடுவார், நமக்கு அது தான் கிடைக்கும்.உண்மையான பாதை தவறான பாதை இல்ல சில பேர் தவறானபாதை புகழ்ச்சி ஆசை ஆணவம் திமிருஅகம்பாவம் யார் சொல்லுவதையும் மதிப்பதில்லை பதவி தேர்ந்தெடுத்துக்கொண்டு இறைவன் கொடுத்த வரம் என்று பேசுவார்கள் அதெல்லாம் பிழைஅதெல்லாம் தவறு அவர்கள் சுயநலவாதிகள் எனக்கு தெரியும் யார் எப்படி இறைவன்கொடுத்த வரத்தை வைத்து அவர்களின் கணக்கு பார்த்து விடலாம்.உண்மை உண்மை சத்தியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*